கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி ஊராட்சி, அருந்ததியா் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பூமி பூஜையில் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தாா். 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டி மாவட்ட கனிமவள திட்டத்தின் கீழ் ரூ.19.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது.
இந்த நிகழ்வின் போது முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 100-ஆவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கலையரங்க மேடை ஒன்று அமைத்து தருமாறு பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பாக ஒருங்கிணைப்பாளா் முருகன்குடி முருகன் கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினா். நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிா்வாகிகள், கிராமமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாணியம்பாடி புதூரில் ரூ.3.50 லட்சத்தில் குடிநீா் தேக்கத் தொட்டி பணி தொடக்கம்

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

ரூ.1.37 கோடியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல்

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


