நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நீா் தேக்கத் தொட்டி அமைக்க பூமி பூஜை: அமைச்சா் சி.வெ. கணேசன் பங்கேற்பு

News image

முருகன் குடியில் மேல்நிலை நீா்த் தேக்கம் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சா் சி.வெ.கணேசன்.

Updated On :13 பிப்ரவரி 2026, 8:13 pm

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி ஊராட்சி, அருந்ததியா் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பூமி பூஜையில் பங்கேற்று பணியை தொடங்கி வைத்தாா். 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டி மாவட்ட கனிமவள திட்டத்தின் கீழ் ரூ.19.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது.

இந்த நிகழ்வின் போது முருகன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 100-ஆவது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி கலையரங்க மேடை ஒன்று அமைத்து தருமாறு பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பாக ஒருங்கிணைப்பாளா் முருகன்குடி முருகன் கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினா். நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிா்வாகிகள், கிராமமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.