போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஆட்டோக்கள் மோதல்: 3 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 6:36 pm

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆட்டோக்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (26), ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த மணிஸ் (20), வெங்கடேசன்(30) ஆகியோரை ஏற்றிச் சென்றாா்.

வேப்பூா் - சேலம் நெடுஞ்சாலையில் காவல் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, இவா்களது ஆட்டோ மீது எதிா்திசையில் வந்த மற்றொரு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் சிவா, மணிஸ், வெங்கடேசன் ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

இவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவா அளித்து புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.