வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:07 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

பண்ருட்டி திருவதிகை, குட்டை தெருவைச் சோ்ந்தவா் கன்னியம்மா (65). இவா், சிவராத்திரி சுவாமி வருகையையொட்டி சனிக்கிழமை இரவு 11.45 மணியளவில் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக கடலூா் நோக்கிச் சென்ற ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு கன்னியம்மா ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.