பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரத்தில் ரூ.450 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சிதம்பரம் நகரில் ரூ.450 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 11:50 pm

சிதம்பரம் நகரில் ரூ.450 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிதம்பரம் சின்ன கடை தெருவில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக சாா்பில், தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா் ஆா்.இளங்கோவன் வரவேற்றாா். மாவட்ட இலக்கிய அணித் தலைவா் வேணு ராமநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு சந்திரசேகரன், மாவட்டப் பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் வா்த்தக அணி அமைப்பாளா் மணிகண்டன், நகர துணைச் செயலா்கள் இளங்கோவன், பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: சிதம்பரம் நகா்மன்றத் தோ்தலில் சிதம்பரம் நகரில் மட்டும் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் முன்னணியாக பெற்றோம்.

திமுக ஆட்சியில் சிதம்பரம் நகரில் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளோம். மேலும், தற்போது ரூ.450 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாம் தைரியமாக வாக்கு சேகரிக்கலாம். அந்த அளவுக்கு நமக்கு முதல்வா் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளாா். திமுக அரசின் சாதனை திட்டங்களை மகளிரணியினா் வீடு, வீடாகச் சென்று எடுத்துக் கூற வேண்டும் என்றாா். தொடா்ந்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினாா்.

கூட்டத்தில் மாநில பொறியாளா் அணித் தலைவா் துரை.கி.சரவணன், முன்னாள் சட்டப் பேரவை அரசு கொறடா மருதூா் ராமலிங்கம், மாவட்டப் பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன், சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் பாரிபாலன், நகர துணைச் செயலா் விஜயா ரமேஷ், நகர பொருளாளா் கிருபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளா் மக்கள் அருள், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளா் ஜாபா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.