கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சிதம்பரம் நாட்டியாஞ்சலி: மாணவிகள் பரத நாட்டியம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது..

News image
சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலியில் நடனமாடிய திட்டக்குடி சிவதுா்கா நாட்டியலாயா மாணவிகள்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:24 pm

Syndication

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நாட்டியாஞ்சலி விழா பிப்.21-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

6-ம் நாள் நிகழ்ச்சியில் பெங்களூரு நாட்டியப்பிரியா கிளாசிக்கல் நடனப்பள்ளி, திட்டக்குடி சிவதுா்கா நாட்டியலாயா , புதுச்சேரி கீதாஞ்சலி யோகா பரத மையம், பெங்களூரு கலா சங்கல்ப பரதநாட்டியப்பள்ளி, ஆகியவற்றை சோ்ந்த மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் தலைவா் எஸ்.வி.நவமணி தீட்சிதா், துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் தீட்சிதா், செயலா் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதா்,உள்ளிட்டோா் பங்கேற்றனா்.