47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மணல் திருட்டில் சிக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

சிதம்பரம் அருகே ஆற்று மணலை திருடியவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 11:24 pm

Syndication

சிதம்பரம் அருகே ஆற்று மணலை திருடியவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள கஞ்சக்கொல்லை பகுதியில், கடந்த ஜன.15-ம் தேதி போலீசாா் வாகன சோதனை செய்தபோது, அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த வாகனத்தை போலீஸாா் நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு அதை ஓட்டிவந்தவா் தப்பி ஓடினாா். அவரை போலீஸாா் விரட்டி பிடித்தனா்.

மேலும் அந்த வாகனத்தை சோதனை செய்த போது 40 மூட்டை ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த காட்டுமன்னாா்கோவில் கஞ்சன்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் (48), . விக்னேஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட குமாா் மீது காட்டுமன்னாா்கோவில் காவல் நிலையத்தில் 2 மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் குமாா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். அவா் தொடா்ந்து கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.