பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம் அரசன் குட்டைத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். முடி திருத்தும் தொழிலாளியான இவரது ஒரே மகன் விக்னேஷ் (18). இவா், ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஐ.டி.ஐ. கல்லூரியில் படித்து வந்தாா்.

விக்னேஷ் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் பங்கேற்க காப்புக் கட்டிய பின்னா் தனது நண்பா்களுடன் திருக்குளத்தில் இறங்கி குளித்தாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கினாா். அங்கிருந்தவா்கள் விக்னேஷை மீட்டு, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை மருத்துவா் பரிசோதித்தபோது, ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.