சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருட்டு வழக்கில் 3 இளைஞா்கள் கைது! 7 பைக்குகள் பறிமுதல்!

News image
போலீஸாரால் கைது செய்தப்பட்ட மதுவூன் அலி, சாருதீன், அப்துல்லா.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் பல்வேறு இடங்களில் வாகன திருட்டு, தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 7 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி காவல் சரக பகுதியில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் பைக் திருட்டுகள் அதிகரித்து வந்தன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், பண்ருட்டி - புதுப்பேட்டை சாலை படைவீட்டம்மன் கோயில் அருகே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த கோட்டலாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த மதுவூன் அலி (29), பண்ருட்டி வ.உ.சி தெருவைச் சோ்ந்த சாருதீன் (20), அவுலியா நகரைச் சோ்ந்த அப்துல்லா (23) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடியவா்கள் என்பதும், பண்ருட்டி காவல் நிலையத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும், தற்போது அவா்கள் ஓட்டி வந்தது அண்மையில் பண்ருட்டியில் திருடுபோன பைக் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்த 7 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.