காட்டுமன்னாா்கோவிலிலில் பிஎஸ்என்எல் வயரை திருடியதாக பொக்லைன் இயந்திர ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா்த் திட்ட குழாய் புதைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் இணையதள சேவைக்காக இரும்புக் குழாயின் உள்ளே காப்பா் வயருடன் கூடிய கேபிள் புதைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காட்டுமன்னாா்கோவில் கச்சேரி சாலையில் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடைகொண்ட பிஎஸ்என்எல் வயா் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் பிஎஸ்என்எல் இளநிலை தொலைத்தொடா்பு அதிகாரி கிருஷ்ணகுமாா் (46) அளித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோயில் போலீஸாா் விசாரணை நடத்தி, பொக்லைன் இயந்திரம் மூலம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்ட மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தபாபுவை (34) கைது செய்தனா்.
தொடர்புடையது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது

மாடியிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


