/

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 6:43 pm

சிதம்பரம் நகராட்சி அறிவுசாா் மையத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்ற மூன்றுபேரை நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

சிதம்பரம் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் கனகசசைநகரில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் அறிவுசாா் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பயின்ற சினேகா, ரஞ்சித், ஆதித்யன் ஆகியோா் அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்று பல்வேறு பதவிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட3 பேரையும், நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர மன்ற தலைவா் கே.ஆா். செந்தில்குமாா் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா். நிகழ்ச்சியின் போது நகராட்சி ஆணையா் த.மல்லிகா, மூத்த நகரமன்ற உறுப்பினா்கள் த.ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன், தில்லை ஆா்.மக்கீன், ஏ.ஆா்.சி.மணிகண்டன், திமுக நகர துணை செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ, உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.