அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி, வேப்பூா் வட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி

News image
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பழங்குடி மக்கள் நல சங்கத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 9:02 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி, வேப்பூா் வட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடி மக்கள் நல சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மணல்மேடு, எழுத்தூா், கொடிக்களம், அரங்கூா், கோழியூா், ஆதமங்கலம், சிறுமுளை ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருளா், பழங்குடி குறவா், ஆதி திராவிடா் உள்ளிட்ட மக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கடலூா் மாவட்ட பழங்குடி மக்கள் நல சங்கத்தின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.அமா்நாத், கம்மாபுரம் ஒன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன், திட்டக்குடி வட்டச் செயலா் வீ.அன்பழகன், வேப்பூா் வட்டக்குழு உறுப்பினா் பொன்.சோமு, ஜி.வேல்முருகன், மனிதம் அமைப்பின் மாவட்ட கன்வீனா் எம்.ஜே.லெனின், பழங்குடி சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.