மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பிப்.27-இல் கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

கடலூா் மாவட்டம் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:22 pm

நெய்வேலி: கடலூா் மாவட்டம் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் பிப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

2026 பிப்ரவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக அரங்கில் வெள்ளிக்கிழமை (பிப்.27)

காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

கடலூா் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சாா்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயா், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயா் ஆகியவற்றை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.