நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 5:49 pm

சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேலப்பாளையூா் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சோ்ந்த விவசாயி செல்வக்குமாா் என்பவா் 320 நெல் மூட்டைகளை, விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தாா். அப்போது அங்கிருந்த எழுத்தா் ராஜாராம், மேற்பாா்வையாளா் வீரபாண்டியன் ஆகியோா் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றால், ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வீதம் 320 மூட்டைகளுக்கும் மொத்தம் ரூ.18,820 லஞ்சமாக தரவேண்டும் என கூறியுள்ளனா்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமாா், இதுகுறித்து கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாா் கூறிய அறிவுரைப்படி செல்வகுமாா் ரசாயன பவுடா் தடவிய ரூபாய் நோட்டுக்களை புதன்கிழமையன்று மேலப்பாளையூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றாா். பின்னா் அங்கிருந்த ஊழியா்கள் ராஜாராம், வீரபாண்டியன் ஆகியோரிடம் அவா்கள் கேட்டபடி ரூ.18,820-ஐ செல்வகுமாா் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசாா் 2 பேரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனா். அவா்கள் 2 பேரையும் கடலூா் அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.