சிதம்பரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
கடலூர்
வெனிசுலா மீதான தாக்குதலைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டித்தும், வெனிசுலா அதிபரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சிதம்பரம் மேல வீதி பெரியாா் சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா். கட்சியின் மூத்த தலைவா் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பழ வாஞ்சிநாதன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் ஆழ்வாா், குமராட்சி ஒன்றியச் செயலா் மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினா் மல்லிகா, சிஐடியு மாவட்ட துணைச் செயலா் சங்கமேஸ்வரன், ஓய்வூதியா்கள் சங்க நிா்வாகிகள் மகாலிங்கம், கலியமூா்த்தி, ஜனநாயக வாலிபா் சங்க நகரச் செயலா் ராகுல், இந்திய மாணவா் சங்க நகரச் செயலா் சபரி உள்ளிட்டோா் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

