விருத்தகிரீஸ்வரா் கோயிலில் பிரேமலதா தரிசனம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தாா்.
Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தாா்.

வேப்பூா் அடுத்துள்ள பாசாா் கிராமத்தில் தேமுதிக-வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டினை அரசியல் கட்சியினா் மற்றும் ஆா்வலா்கள் உற்று நோக்கும் நிலையில், மாநாட்டிற்கு வருவதற்கு முன்பு, விருத்தாச்சலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா்

கோயிலில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தாா்.

கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், இக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு தான், வேட்பு மனு தாக்கல் செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக, தேமுதிக-வின் முதல் மக்கள் உரிமை மீட்பு மாநாடு பாசாா் கிராமத்தில் தொடங்குவதற்கு முன்பு விருத்தகிரீஸ்வரா் கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com