கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மூதாட்டியை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் அவரது மகன், மருமகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சரசு (66). இவருக்குச் சொந்தமான 3 ஏக்கா் நிலம் வெங்கடாம்பேட்டையில் உள்ளது. இந்த நிலத்தை சரசு பயிா் செய்து வருகிறாா்.
இந்த நிலத்தில் பங்கு கேட்டு மகன் ஜெயசீலன் (40), மருமகள் கலைவாணி (38) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு சரசை திட்டி தாக்கியுள்ளனா். மேலும், ஜெயசீலன் கத்தியால் வெட்டியதில் சரசின் வலது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து சரசு அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் ஜெயசீலன், கலைவாணி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மொபெட் மீது சரக்கு வாகனம் மோதல்: பெண் உயிரிழப்பு

இருவருக்கு அரிவாள் வெட்டு: 9 போ் மீது வழக்கு
சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



