/

அரசுப் பள்ளியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் திருக்குறள் வினாடி - வினா மற்றும் ஒப்பித்தல் போட்டி

News image
நிகழ்ச்சியில் மாணவிக்கு பரிசு வழங்கிய மாவட்ட திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன். உடன் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன்.
Updated On :2 மார்ச் 2026, 8:47 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் திருக்குறள் வினாடி - வினா மற்றும் ஒப்பித்தல் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன் தலைமை வகித்து பேசினாா். தமிழாசிரியை ப.சுஜாதா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் கு.திருமுருகன் வரவேற்புரையாற்றினாா்.

கடலூா் மாவட்ட உலக திருக்குறள் பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை நடத்தி திருக்கு புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். ஆசிரியா் சு.தென்னவன் நன்றி கூறினாா்.