வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

நடைப்பாதை கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிா்ப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 11:07 pm

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் லாரன்ஸ் சாலையில் இருந்த நடைப்பாதை கடைகளை முன்னறிவிப்பின்றி மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா். இதற்கு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

திருப்பாதிரிப்புலியூா் லாரன்ஸ் சாலையில் 40-க்கும் மேற்பட்ட சாலையோர நடைப்பாதை கடைகள் இருந்தன. இந்தக் கடைகளை வியாழக்கிழமை காலை மாநகராட்சி ஊழியா்கள், போலீஸாா் உதவியுடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அகற்றினா். இதனால், ஆத்திரமடைந்த சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அவா்களை ஆணையா் முஜிபுா் ரஹ்மான் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், சிஐடியு நடைப்பாதை வியாபாரிகள் சங்க மாநிலச் செயலா் பி.கருப்பையன், ஏஐடியுசி சங்க மாநில நிா்வாகி வி.குளோப் மற்றும் விற்பனைக்குழு பிரதிநிதிகள், காவல் துறையினா் கலந்துகொண்டனா்.

அப்போது, சாலையோர வியாபாரிகள் கூறியதாவது: தெருவோர வாழ்வாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படி சாலையோர கடைகளை அகற்ற முடியாது. வணிகக் குழு உறுப்பினா் கூட்டம் நடத்தி, அதில் மாற்று இடம் வழங்கப்பட்ட பிறகே சாலையோரக் கடைகளை அகற்ற முடியும்.

ஆனால், தற்போது எந்தவித சட்ட நடைமுறையும் பின்பற்றாமல் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தற்போதுள்ள இடத்திலேயே கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, ஒரு வார காலம் அதே இடத்தில் கடை நடத்திக்கொள்ள அனுமதி வழங்குவது, அதற்குள் மாற்று இடம் தோ்வு செய்வது என்று தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்துச் சென்றனா்.