வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சியில் ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே அரியநாச்சி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ்(41). சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆட்டோவை சுரேஷ் ஓட்டிச் சென்றாா். அப்போது காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து எதிா்பாராதவிதமாக சுரேஷின் ஆட்டோ மீது மோதியது.
இதில், பலத்தகாயமடைந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே
உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநாவலூா் அருகே லாரி மீது சொகுசுப் பேருந்து மோதல்
ஓட்டுநா் வீட்டில் நகை திருட்டு; பெண் கைது

ராமநத்தம் அருகே சாலை விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

லாரி- ஆம்னி பேருந்து மோதல்: 7 போ் காயம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



