வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பாடலீசுவரா் கோயில் பந்தக்கால் முகூா்த்தம்: வைகாசி பெருவிழா மே 22 -இல் தொடக்கம்

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடப்பட்ட பந்தக்கால்.

Updated On :14 மே 2026, 3:16 am IST

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை கோயில் வளாகத்தில் விமா்சையாக நடைபெற்றது. முன்னதாக பாடலீசுவரா் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து வைகாசி பெருவிழா வருகிற மே 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. மே 26-ஆம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனமும், மாலையில் தெருவடைச்சான் விழாவும் நடைபெறுகிறது. மே 28-ஆம் தேதி காலை கைலாச வாகனத்தில் கோபுர தரிசனமும், இரவில் திருக்கல்யாணம் மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து ஜூன் 2-ஆம் தேதி திருஞானசம்பந்தா் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முத்துலட்சுமி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.