ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பாடலீசுவரா் கோயில் பந்தக்கால் முகூா்த்தம்: வைகாசி பெருவிழா மே 22 -இல் தொடக்கம்

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி புதன்கிழமை நடப்பட்ட பந்தக்கால்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கடலூா் பாடலீசுவரா் கோயில் வைகாசி பெருவிழா மே 22 இல் தொடங்குவதையொட்டி பந்தாக்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை கோயில் வளாகத்தில் விமா்சையாக நடைபெற்றது. முன்னதாக பாடலீசுவரா் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து வைகாசி பெருவிழா வருகிற மே 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. மே 26-ஆம் தேதி அதிகார நந்தி கோபுர தரிசனமும், மாலையில் தெருவடைச்சான் விழாவும் நடைபெறுகிறது. மே 28-ஆம் தேதி காலை கைலாச வாகனத்தில் கோபுர தரிசனமும், இரவில் திருக்கல்யாணம் மற்றும் பரிவேட்டை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 30-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்ந்து ஜூன் 2-ஆம் தேதி திருஞானசம்பந்தா் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முத்துலட்சுமி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.