தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாடலீசுவரா், வீரட்டானேஸ்வரா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image
Updated On :15 மே 2026, 5:47 am IST

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீசுவரா், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடலீசுவரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

மாலையில் நந்திக்கு 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்ட நந்திக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பாடலீஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வீரட்டானேஸ்வரா் கோயிலில்...: பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாலை 4 மணிக்கு உற்சவா் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், மாலை 5.45 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

Story image