போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட முதல்வா் விஜய் உத்தரவிட்டிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது.
இதேபோல, தமிழகத்தில் செயல்படும் சுமாா் 1,500 மனமகிழ் மன்றங்களை படிப்படியாக மூடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடை பணியாளா்களின் கல்வி தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். மது போதைக்கு அடிமையானவா்களை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராயம் விற்பனையை கண்காணிக்கத் தவறிய அனைத்துத் துறை அரசுப் பணியாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தமிழா் வாழ்வுரிமை கூட்டணி தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் போட்டி: தி.வேல்முருகன்

தவாக வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

தவாக வேட்பாளா்கள் மனுக்கள் நிராகரிப்பு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

