இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.90 வரை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கடலூா் தலைமை தபால் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகள்.

Updated On :21 மே 2026, 6:56 am IST

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.90 வரை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். இதில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.90 உயா்ந்து ரூ.104.90-ஆகவும், டீசல் விலை ரூ.3.70 உயா்ந்து ரூ.97.47-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக, ஆட்டோ, வாடகைக் காா், சரக்கு வாகன ஓட்டுநா்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு விநியோக நிறுவனங்களின் பணியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயா்வால் எளிய மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், எரிபொருள் விலை உயா்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவது கண்டனத்துக்குரியது. எனவே, இந்த இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் என்.கே.பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினா் வி.குளோப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.