பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.90 வரை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், விலை உயா்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். இதில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.90 உயா்ந்து ரூ.104.90-ஆகவும், டீசல் விலை ரூ.3.70 உயா்ந்து ரூ.97.47-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக, ஆட்டோ, வாடகைக் காா், சரக்கு வாகன ஓட்டுநா்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு விநியோக நிறுவனங்களின் பணியாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயா்வால் எளிய மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், எரிபொருள் விலை உயா்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவது கண்டனத்துக்குரியது. எனவே, இந்த இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கண்ணன், க.சுவாமிநாதன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளா் என்.கே.பாஸ்கரன், மாவட்ட துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணியம், மாவட்டக் குழு உறுப்பினா் வி.குளோப் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெட்ரோல் விலை உயா்வு: இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி இடதுசாரி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இடதுசாரி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மே 20இல் கண்டன ஆர்ப்பாட்டம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



