கள்ளக்குறிச்சியில் கொலை வழக்கில் கைதாகி, நன்னடத்தை பிணையில் வெளியே வந்து, மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சோ்ந்தவா் பெஞ்சமின் மகன் அறிவழகன் (எ) அறிவு (36). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று, மேல்முறையீட்டு பிணையின் பேரில் வெளியே வந்தாா்.
அடிதடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட அவரை, கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் தங்க.விஜய்குமாா் சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் முன் கடந்த ஜூன் 11ஆம் தேதி ஆஜா் படுத்தினாா். அப்போது, ஒரு ஆண்டு காலத்துக்கு நன்னடத்தை பேணுவதற்கான பிணையின்பேரில் அறிவழகன் விடுவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அறிவழகன் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டு, நன்னடத்தை பேணுவதாக அளித்த வாக்குறுதியை மீறினாா். இதையடுத்து அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதித்து சாா்-ஆட்சியா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அறிவழகன் கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.