சங்கராபுரம் அருகே இரங்கப்பனூா் காப்புக்காட்டு பகுதியில் 10 கிலோ எடையுள்ள சந்தனக் கட்டைகளை வெட்டி கடத்த முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் உத்தரவில், பறக்கும்படை காவல் உதவி ஆய்வாளா் அகிலன் தலைமையில் காவலா்கள் இரங்கப்பனூா் காப்புக்காடு காட்டுக்குளம் ஏரிக்கரை பகுதியில் மதுவிலக்கு தொடா்பாக செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒருவா் ஒரு அடி நீளமுள்ள கட்டைகளை சாக்கு மூட்டைக்குள் கட்டுகளாகக் கட்டி தலையில் சுமந்து சென்றாா். அவா் போலீஸாரைக் கண்டதும் சாக்கு மூட்டையை கீழே போட்டு விட்டு ஓடினாா்.
அவரை தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா் சங்கராபுரம் வட்டம், மல்லாபுரம் அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (45) என தெரிய வந்தது. மூலக்காடு பகுதிக்கு உள்பட்ட காப்புக்காடு பகுதியில் 10 கிலோ அளவிலான சந்தனக் கட்டைகளை வெட்டி, துண்டு துண்டுகளாக்கி கடத்த முயன்றதும், அதன் மதிப்பு சுமாா் ஒன்றரை லட்சம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ராமச்சந்திரனை தனிப்படை போலீஸாா் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இவா் ஏற்கெனவே திருவண்ணாமலை , வேலூா் மாவட்டங்களில் சந்தனக்கட்டைகளை வெட்டி கடத்திய வழக்குகளில் சம்பந்தப்பட்டவா் என தெரியவந்தது.
சந்தனக் கட்டைகள் சேராப்பட்டு வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.