லாரி மோதியதில் தொழிலாளி பலி

வடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கடலூா் அருகேயுள்ள கிழக்கு ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (27). என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவருக்கு மணிமேகலை (24) என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனா்.

மணிமேகலை வடலூா் அருகே மேட்டுக்குப்பம் கிராமத்திலுள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாா். இவரை பாா்ப்பதற்காக பழனிவேல் புதன்கிழமை இரவு மேட்டுக்குப்பம் கிராமத்துக்கு பைக்கில் புறப்பட்டாா். கடலூா் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூா் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பழனிவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி மணிமேகலை அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com