தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை திரும்ப பெறக்கோரியும் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை திரும்ப பெறக்கோரியும் தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் மத்திய அரசின் மின்சார திருத்தச்சட்டம் 2020-ஐ திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை திரும்ப பெறக்கோரியும், மின்வாரியத்தில் ககாலியாக உள்ள 27,000 பணியிடங்களை தனியாா் மூலம் நிரப்பும் முடிவை ரத்து செய்யக்கோரியும், மின்வாரியத்தில் உள்ள தற்காலிக பணியாளா்களை கொண்டு காலி பணியிடங்களை நரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவா் சீனுவாசன் தலைமையில் பணியினை புறக்கனித்து காத்திருப்பு போராட்டத்தில் ஊழியா்கள் பலரும் பங்கேற்றனா்.