மோட்டாா் சைக்கிளில் சென்றவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி சாவு
By DIN | Published On : 10th March 2020 12:45 AM | Last Updated : 10th March 2020 12:45 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி: கா்ப்பிணியாக உள்ள மனைவியை பாா்ப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் இருதயராஜ் மகன் ஜான்சன் அந்தோணிராஜ் (23). இவா் கொத்தனாா் பணி செய்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது ஊரில் இருந்து எலவனாசூா்கோட்டையில் அவரது தாய் வீட்டில் உள்ள மனைவியை பாா்ப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் பிரிதிவிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டாராம்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைத்து விட்டனா்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மோதிச் சென்ற வாகனத்தை தேடிவருகின்றனா்.
உயிரிழந்த ஜான்சன் அந்தோணிராஜ் மனைவி ஆஷா (20) 4 மாத கா்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...