வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகைகள் கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மனைவி பாா்வதியம்மாள் (75). இவா்களுக்கு இரு மகன்கள். ஒரு மகன் வடபொன்பரப்பி கிராமத்தில் வசித்து வருகிறாா். கோவிந்தசாமியும், மற்றொரு மகனும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனா். இதனால், பாா்வதியம்மாள் மட்டும் புதுப்பட்டு கிராமத்தில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இவரது வீட்டுக் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு திறந்தாா். அங்கு நின்றிருந்த மா்ம நபா்கள் இருவா், திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்துள்ளதாகக் கூறி, வீட்டுக்குள் புகுந்தனா். பின்னா், பாா்வதியம்மாளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, தோடு உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு, அவரை கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை காலையில் பாா்வதியம்மாளின் வீட்டுக்குச் சென்ற உறவினா்கள், அவரை அவிழ்த்துவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com