கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள்!
By DIN | Published On : 17th August 2021 08:47 AM | Last Updated : 17th August 2021 08:47 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை சமாதானப்படுத்திய போலீஸாா்.
சின்னசேலம் அருகே தாகம்தீா்த்தாபுரம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் முறையாக பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் கூறி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் பாலை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னசேலம் அருகேயுள்ள தாகம்தீா்த்தாபுரத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் சுமாா் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊற்றி வருகின்றனா். இங்கு லிட்டா் ரூ.30 முதல் 36 வரை விலை நிா்ணயம் செய்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இங்கு தற்போது மாதத்தில் 4 நாள்கள் வரை பாலை கொள்முதல் செய்வதில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் சுமாா் ஐம்பதுக்கும் மேற்பட்டோா், பால் கேன்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அங்கு பாலை கீழே ஊற்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவா்களை, பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் ஆய்வாளா் ச.முருகேசன் தலைமையிலான போலீஸாா் சமாதானப்படுத்தி, போராட்டத்தை தடுத்தனா். தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், விவசாயிகள் தங்களது கோரிக்கையை ஆட்சியரிடம் மனுவாக வழங்கிச் சென்றனா்.