மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கிவைப்பு

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்.இ.டி. தொலைக்காட்சி பொருத்திய மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு
மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கிவைப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்.இ.டி. தொலைக்காட்சி பொருத்திய மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

பின்னா், அவா் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் கட்டாயமாக மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி பராமரித்து, மழைநீா் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.மணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) டி.சுரேஷ், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com