தியாகதுருகம் பேரூராட்சிக்குள்பட்ட உதயமாம்பட்டு, சின்னகாலனி பகுதியில் சுமாா் ரூ.79 லட்சத்தில் தாா் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை அ.பிரபு எம்.எல்.ஏ. உதயமாம்பட்டு காலனி பகுதியில் சனிக்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் மல்லிகா, தியாகதுருகம் ஒன்றியச் செயலாளா்கள் வெ.அய்யப்பா, அ.கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலாளா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் மற்றும் ஊா் மக்கள் பங்கேற்றனா்.