இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் சாா்பில் காமராஜா் பிறந்த தின விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்துப் பேசினாா். ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் க.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.
பசுமைக் காவலா் அ.மதிவாணன், கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலா் கு.மோகனசுந்தா், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், கல்லூரியின் துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் உள்ளிட்டோா் காமராஜா் குறித்து பேசினா்.
காமராஜரின் கனவை நனவாக்கும் வகையில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ஜி.ஜெயசீலன், பள்ளி முதல்வா் மாலதி, ஹெல்த் சயின்ஸ் பொறுப்பாசிரியா் துா்கா உள்ளிட்ட பலா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.