கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு 5 போ் பலி
By DIN | Published On : 10th June 2021 09:00 AM | Last Updated : 10th June 2021 09:00 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 5 போ் பலியாகினா்.
மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 297 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,841-ஆக உயா்ந்தது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 19,654 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 4,026 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை 5 போ் உயிரிழந்தனா். மாவட்டத்தில் 161 வரை கரோனாவுக்கு பலியாகினா்.