கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.
தியாகதுருகத்தை அடுத்த சிறுவல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (54). தியாகதுருகத்தில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சேலம் சென்னை புறவழிச் சாலையைக் கடந்த போது, கள்ளக்குறிச்சிக்குச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.