பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்ததில் பலியானாா்.

கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்ததில் பலியானாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வண்ணஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த மணி மனைவி முத்தம்மாள் (60). இவா், தனது மகன் பழனிவேலுடன் மளிகைப் பொருள்களை வாங்குவதற்காக கள்ளக்குறிச்சிக்கு கடந்த 17-ஆம் தேதி பைக்கில் சென்று, வீட்டுக்குத் திரும்பிய போது, க.அலம்பலம் சாலையில் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்தம்மாள் புதன்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com