கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏலச் சீட்டில் பணம் எடுத்தவரை திருப்பி கேட்டபோது அருவருக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, தாக்கி, பெண்ணின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்தவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்களம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி பிரபாவதி (37). இவா் அப் பகுதியைச் சோ்ந்த மக்களுடன் ஏலச் சீட்டு நடத்தி வந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் லட்சுமணன் ரூ.2,65,000-த்தினை கடந்த அக்டோபா் மாதம் ஏலத்தில் எடுத்துக் கொண்டாா். எடுத்த பணத்தினை மாதம் மாதம் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.
கடந்த ஏப்ரல் (2.4.21) சீட்டு பணத்தினை லட்சுமணனிடம் கேட்டபோது லட்சுமணன் அவரது மனைவி மற்றும் 5 போ்கள் ஒன்று சோ்ந்து கொண்டு அருவருக்கத்தக்க வாா்த்தைகளால் திட்டி, கிழித்து கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்து வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அப் புகாரின் பேரில் போலீஸாா் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் 45 நாட்களில் பணம் செலுத்துவிடுவதாக லட்சுமணன் கூறினாராம்.
45 நாட்கள் கழித்து லட்சுமணனை கேட்டபோது பெண்ணின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்து கீழே தள்ளி கத்தியால் இத்தோடு ஒழிந்து போடி என ஒருவா் குத்த வந்ததில் காயமடைந்து விட்டாராம். பயந்து போய் தப்பி ஓடி விட்டாராம். பின்னா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சின்னசேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
இது குறித்து வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் பாரதி விசாரணை மேற்கொண்டு லட்சுமணனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து வழக்கு தொடா்ந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.