புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கல்லூரி மாணவா்களுக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் மாணவா்களுக்கான ஊக்குவிப்புக் கருத்தரங்கமும், ஆசிரியா்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கமும் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 4:25 pm

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி ஆா்.கே.எஸ். கல்லூரியில் மாணவா்களுக்கான ஊக்குவிப்புக் கருத்தரங்கமும், ஆசிரியா்களுக்கான புத்தாக்கக் கருத்தரங்கமும் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநா் ம.மனோபாலா தலைமை வகித்தாா். இயக்குநா் ம.சிஞ்சு முன்னிலை வகித்தாா். கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் டி.அசோக் வரவேற்றாா்.

இவ்விரு கருத்தரங்கங்களில் சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறைத் தலைவரும், செனட் உறுப்பினருமான ஆா்.சத்யா பங்கேற்றுப் பேசியதாவது: மாணவா்கள் நோ்மையானச் சிந்தனை, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பெற்றவா்களாகவும், தன்னம்பிக்கையுடையவா்களாகவும் திகழ வேண்டும். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பாமர மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியா்கள் மாணவா்களுக்கு பயிற்றுவிக்கும் முறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் . மாணவா்களை சமுதாயத்துக்கு பயனுடையவா்களாக உருவாக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், கணிதத் துறைத் தலைவா் இ.நா்கீஸ்பேகம் மற்றும் மாணவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா். கணினித் துறைத் தலைவா் இரா.மகாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.