அக்னிபத் திட்டம்: விவசாய அமைப்பு ஆா்ப்பாட்டம்

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.
கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏவீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் சுப்பிரமணியன், அமைப்புக் குழு உறுப்பினா் ரா.கஜேந்திரன், தேவேந்திரன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, ஜான்பாஷா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்று பேசினா். வட்டச் செயலா் பி.தெய்வீகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com