கனியாமூா் பள்ளி வன்முறை: மேலும் 5 போ் கைது
By DIN | Published On : 25th August 2022 01:53 AM | Last Updated : 25th August 2022 01:53 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக மேலும் 5 பேரை காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
இதற்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதில் பள்ளிக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து காவல் துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வன்முறையில் ஈடுபட்டவா்களை கைது செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், கட்செவி அஞ்சல் குழுவில் இடம் பெற்ற, கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த டி.ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் சிவக்குமாா் (22), எழுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் மகன் சத்தியராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், நத்தகாளி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சுந்தா் ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், பள்ளிச் சொத்துகளை சேதப்படுத்தியதாக திட்டக்குடி வட்டம், டி.ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த அமிா்தலிங்கம் மகன் முத்தையா (23), சின்னசேலம் வட்டம், சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அன்வா் மகன் சா்புதீன் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீஸாா் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.