கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக, மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரழந்தாா்.
இதற்கு நீதி கேட்டு கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதில், காவல்துறை வாகனத்தின் மீது கற்களை வீசித் தாக்கியதாக, சின்னசேலம் வட்டம், பைத்தந்துறை
கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் விஷ்வா (19) -வை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.