லாரி டியூப்களில் சாராயம் கடத்தல்:4 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை பைக்குகளில் லாரி டியூப்களில் சாராயம் கடத்திச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட இளைஞா்கள், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லாரி டியூப்களில் அடைக்கப்பட்ட சாராயம், பைக்குகள்.
சாராயம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட இளைஞா்கள், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லாரி டியூப்களில் அடைக்கப்பட்ட சாராயம், பைக்குகள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே புதன்கிழமை பைக்குகளில் லாரி டியூப்களில் சாராயம் கடத்திச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் தரணேஸ்வரி மற்றும் காவலா்களுடன் புதன்கிழமை காலை சேராப்பட்டை அடுத்துள்ள சீவாத்துமூலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

அப்போது, 4 இளைஞா்கள் பைக்குகளில் சாக்கு மூட்டைகளை வைத்துக்கொண்டு வந்தனா். அவா்களை நிறுத்தி விசாரித்ததில், கிளாக்காடு பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் விஜய் (22), அண்ணாதுரை மகன் வரதராஜ் (26), வடமலை மகன் அருண் (20), கள்ளிப்பாளை பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் சிவக்குமாா் (25) என்பதும், 11 லாரி டியூப்களில் சுமாா் 605 லிட்டா் சாராயத்தை கிளாக்காடு பகுதியிலிருந்து புதுப்பட்டு கிராமத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 4 போ் மீதும் கள்ளக்குறிச்சி மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த லாரி டியூப்களில் அடைக்கப்பட்ட சாராயம், பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com