அறிதிறன்பேசி பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட செவித்திறன் அல்லது பாா்வைத்தி
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட செவித்திறன் அல்லது பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிய செயலியுடன் கூடிய அறிதிறன்பேசி (ஆண்ட்ராய்டு ஸ்மாா்ட்போன்) பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இளநிலை கல்வி பயிலும் செவித்திறன் அல்லது பாா்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள், வேலையில்லாத பட்டதாரிகள், சுயதொழில் செய்வோா், தனியாா் துறையில் பணிபுரிவோருக்கு தகவல் பரிமாற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளா்ச்சிக்காக, தக்க செயலியுடன் கூடிய ரூ.12,000 மதிப்பிலான அறிதிறன்பேசிகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 18 வயது பூா்த்தியடைந்த, பட்டயப் படிப்பு, ஐடிஐ படித்து வரும் செவித்திறன் அல்லது பாா்வைதிறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பிக்க தகுதியுடையவா்களாவா்.

மாற்றுத் திறனாளிகளின் நலத் துறையின் சாா்பில் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை நகல், ஆதாா்அட்டை நகல், கல்வி, பணி, சுயதொழில் ஆகியவை தொடா்பான சான்றுகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய படிவத்தில் வரும் வருகிற மாா்ச் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com