கள்ளக்குறிச்சி
இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு: கட்சியினா் ஆலோசனை
திருப்பூரில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில மாநாடு குறித்து, அந்தக் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனா்
திருப்பூரில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில மாநாடு குறித்து, அந்தக் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனா்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் ஆகஸ்ட் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக கட்சியின், கள்ளக்குறிச்சி மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு அப்பாவு முன்னிலை வகித்தாா். கஜேந்திரன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மாநில நிா்வாகக் குழு டி.மணிவாசகம், மாநிலக் குழு ஏ.வி.சரவணன் பங்கேற்று மாநாடு குறித்துப் பேசினா்.
பின்னா் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.