சிலம்பம் குழுப் போட்டி பரிளிப்பு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் குழுப் போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் குழுப் போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் கோவல் தமிழ்ச் சங்கம், வேலூா் சுவாமி விவேகானந்தா் மரபுவழி குருகுல சிலப்புக்கலை அறக்கடைளை இணைந்து நடத்திய சிலம்பம் போட்டிகளுக்கு கோவல் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார உதியன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடக்கி வைத்தாா்.

ஜி.அசோகன், ஜே.திருமூா்த்தி, ஏ.கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலா் பாரதி மணாளன் வரவேற்றாா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250 மாணவா்கள் போட்டியில் பங்கேற்றனா். போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000-ம், இரண்டாம் பரிசாக ரூ.7,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.5,000-ம், நான்காம் பரிசாக ரூ.4,000-ம் வழங்கினா். ஆறுதல் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.

போட்டிகளின் நடுவராக என்.கே.முருகன் செயல்பட்டாா். மூத்த சிலம்ப ஆசான்களுக்கு பீஷ்மா் விருதும், இளைய ஆசான்களுக்கு மாவீரன் மலையமான் திருமுடிக்காரி விருதும், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம், பதக்கம் அணிவித்து தொழிலதிபா் கே.வி.முருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com