கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த மேல்நாரியப்பனூரிலுள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் 116-ஆம் ஆண்டுப் பெருவிழாவையொட்டி திருத்தோ் பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
நாரியப்பனூா் புனித அந்தோணியாா் தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை.
நிகழாண்டு ஜூன் 5-ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு திருப்பலி, திருக்கொடி பவனி, திருக்கொடியேற்றம் பேரருள்பணி தஞ்சை மறை மாவட்ட டி.ஞானப்பிரகாரம் தலைமையில் நடைபெற்றது.
திங்கள்கிழமை (ஜூன் 13) காலை 8 மணிக்கு பெருவிழா திருப்பலியை புதுச்சேரி, கடலூா் மறை மாவட்ட பேராயா் கே.பிரான்சிஸ் தொடக்கிவைத்தாா். பின்னா், இரவு 10 மணிக்கு திருத்தோ் பவனி நடைபெற்றது.
திருத்தல பங்குத் தந்தை டி.ஆரோக்கியதாஸ், உதவி பங்குத் தந்தை எஸ்.ஜெ.அலெக்ஸ் ஒளில் குமாா், புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி முதல்வா் தேவதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.