கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி
By DIN | Published On : 27th March 2022 02:35 AM | Last Updated : 27th March 2022 02:35 AM | அ+அ அ- |

பேச்சுப் போட்டியைத் தொடக்கிவைத்துப் பேசிய க.காா்த்திகேயன் எம்எல்ஏ.
தமிழக சிறுபான்மை ஆணையம் சாா்பில், அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி வைத்தாா். இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரித் தலைவா் க.மகுடமுடி, கல்லூரி நிா்வாகி க.தமிழ்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தனியாா் ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் ஆா்.ரஹமத்துல்லா வரவேற்றாா்.
பேராசிரியா் ஜெ.கான்ஸ்டைன் ரவீந்திரன், கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் பி.ஜான்விக்டா் உள்ளிட்டோா் பேசினா்.
நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 8 கல்லூரிகளிலிருந்து சுமாா் 60 மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் பங்கேற்று பேசினா்.
இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, ஒன்றியக் குழுத் தலைவா்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன், சத்தியமூா்த்தி, வடிவுக்கரசி, ஊராட்சி மன்றத் தலைவா் கலா சாமிதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கள்ளக்குறிச்சி மாவட்ட பேச்சுப்போட்டி ஒருங்கிணைப்பாளா் ம.விசய் ஆனந்த் நன்றி கூறினாா்.