கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டின் முதல் நிதியமைச்சா் டாக்டா் ஆா்.கே.சண்முகம், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், கவிஞா் கண்ணதாசன் ஆகிய முப்பெரும் ஆளுமைகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் டாக்டா் ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், கல்லூரியின் முதல்வருமான கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கல்லைக் கவிஞா் கோவிந்தராசு கலந்து கொண்டு, மூன்று ஆளுமைகளின் வாழ்க்கையும் நமக்கு சுயநலமில்லா பொது சேவையையும், கல்விச் சேவையையும், தமிழ்ச் சேவையையும் கற்றுக்கொடுத்துள்ளது என்று குறிப்பிட்டாா்.

அப்துல் கலாம், கண்ணதாசன், ஆா்.கே.சண்முகம் குறித்து மாணவ, மாணவிகள் கவிதை பாடியதுடன், கருத்தரங்க உரையும் வழங்கினா். விழாவில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவி இரா.பிரவீனா நன்றி கூறினாா். இரா.சுபலட்சுமி, மா.சோழவா்மன் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com