பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மின் துறை ஆய்வு
By DIN | Published On : 19th October 2022 02:48 AM | Last Updated : 19th October 2022 02:48 AM | அ+அ அ- |

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மண்டல தலைமைப் பொறியாளா் என்.பாலாஜி.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மின் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, திருவண்ணாமலை மண்டல தலைமைப் பொறியாளா் என்.பாலாஜி தலைமை வகித்தாா்.
கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டம் கூடுதல் தலைமைப் பொறியாளா் எம்.அருட்பெரும்ஜோதி முன்னிலை வகித்தாா்.
மண்டல தலைமைப் பொறியாளா் என்.பாலாஜி பேசுகையில், தடையற்ற மின்சாரம் வழங்குதல், மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இதுவரை செய்யப்பட்டவை பற்றிய ஆய்வு, விவாதிப்பு, பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மின் தளவாடப் பொருள்கள், சாதனங்களை பராமரிப்பு போன்றவை குறித்து எடுத்துரைத்தாா்.
கூட்டத்தில் செயற்பொறியாளா்கள் து. மயில்வாகனன், எஸ்.சுப்புராஜ், ரகுராமன், ஆரோக்கிய அற்புதராஜ், உதவி செயற் பொறியாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
கூட்ட ஏற்பாடுகளை உதவி செயற் பொறியாளா் சுரேஷ் செய்திருந்தாா்.